தஞ்சையில் பரபரப்பு - நடுரோட்டில் படுத்து போராட்டம் நடத்திய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் பரபரப்பு - நடுரோட்டில் படுத்து போராட்டம் நடத்திய வாலிபர் கைது.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மணிகூண்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மறித்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர் வாகனத்தில் இருந்து சாவியை எடுத்துள்ளனர்.

இதனால், அவர் சாவியைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, போலீசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் திடீரென சாலையில் படுத்து சாவியை திருப்பிக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த நபர் காவல்துறை அதிகாரியிடமும் மீண்டும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டார்.

இந்த அந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தலைமை காவலர் புகார் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for protest mid way in tanjore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->