திருமணத்திற்கு சென்ற கார் லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி..6 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சத்பர்வா பகுதி அருகே இன்று காலை 6 மணி அளவில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் தலைநகரிலிருந்து 184 கி.மீ தொலைவிலுள்ள சத்பர்வா பகுதி அருகே திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் சோன சிங், லோக்நாத் சிங், ஜோகேந்தர் சிங் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Marriage function car accident in jharkhand


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->