ஹமாஸுக்கு நாள் குறித்த டொனால்ட் ட்ரம்ப்! விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

பிப்ரவரி 15ஆம் தேதி பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும், பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதனால், மத்திய கிழக்கு நிலவரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. ஹமாஸ் மீண்டும் எந்த விதத்திலும் தலைதூக்க முடியாத சூழலை உருவாக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இதனுடன், காசா பிரச்சினையைப் பற்றிய தனது பார்வையை தெளிவுபடுத்திய ட்ரம்ப், “நாங்கள் காசாவை வாங்கப்போவது இல்லை, அதை எடுத்துக் கொள்ளப் போகிறோம்” என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார்.

காசாவை ஒரு "ரியல் எஸ்டேட் தளம்" போலக் காணக்கூடாது, மாறாக, பாதுகாப்பான மற்றும் நிலையான இடமாக மாற்ற வேண்டும் என்றார்.  

அந்த பேச்சுவார்த்தையில், ஜோர்டான் மன்னரிடம் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக விளக்கினார். இதன் மூலம், ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை, போர்நிறுத்தத்தின் நிலைமையை கேள்விக்குறியாக்கியிருக்கும் நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்த மாற்றங்கள் நிகழும் என்பதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hamas Israel USA Trump


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->