நல்ல செய்தி: இனி இந்தியர்கள் கவலை கொள்ள வேண்டாம் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளை, பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் இயங்கு தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த மென்பொருளை சார்ந்து இருந்த தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் முடங்கிப் போயின. 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இதன் தாக்கம் ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து உண்மையான காரணம் என்ன என்பதை மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இருப்பினும் க்ரவுட் ஸ்டிரைக் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவே இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த தொழில்நுட்ப கோளாறு சரியாக இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையம் உள்ளிட்ட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இன்று பிற்பகலுக்குள் இந்தியாவில் விமான சேவை சீரடையும் என்றும், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தற்போது விமான சேவை சீராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கிடையே இணையதள பிரச்சனைகள் சீராக வருவதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அந்த விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Microsoft Windows Flight Services


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->