பல வருட காதலியை, ஸ்பேனரால் அடித்து கொலை செய்த காதலன்! - Seithipunal
Seithipunal


மும்பை அருகே தனது பல வருட காதலியை, காதலன் ஸ்பேனரால் 

 அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரோஹித் மற்றும் ஆர்த்தி இருவரும் ஒருவரை ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ரோகித்துடன் பேசுவதை ஆர்த்தி தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆர்த்தி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு நபருடன் தொடர்பில் இருப்பதாக எண்ணி, காதலி ஆர்த்தியை கொலை செய்ய ஒன்றரை அடி நீளம் கொண்ட ஸ்பேனருன் துரத்தி சென்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் சற்று தைரியத்துடன் ஆர்த்தி நடக்க, பாய்ந்து வந்த ரோஹித், ஆர்த்தியை ஒரே அடியில் கீழே வீழ்த்தி, சாகும்வரை அடித்து கொண்டே இருக்கிறார்.

இது அத்தனையும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ள போலிசார், ரோஹித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் நடக்கும் போது சுற்றிலும் அத்தனை நபர்கள் இருந்தும் ஆர்த்தியை காப்பாற்ற முடியவில்லை. காப்பாற்ற முன்வந்த நபரையும் ரோஹித் அடிக்கப் பாய்ந்ததால் அவரும் தயங்கி நின்று விட்டார்.

மேலும் ரோகித் ஆக்ரோஷமாக எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய் என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்து 18 முறை ஸ்பேனரால் அடித்து ஆர்த்தியைகொலை செய்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai lover killed young women 2024


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->