வயநாடு இடைத்தேர்தல் : குஷ்பு VS பிரியங்கா காந்தி இடையே போட்டி!....மலையாள சேனல்களில் பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. மேலும் அதே நாளில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி அங்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை முன்னிறுத்துவதில் தீவிரம் கட்டி வருகின்றனர்.

முன்னதாக வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

தொடர்ந்து நேற்று மலையாள சேனல்களில் பிரியங்கா காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பு களம் இறங்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவது
குறித்து கட்சி மேலிடம் தன்னிடம் பேசவில்லை என்றும், கட்சி மேலிடம் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும், அந்த பொறுப்புக்கு 100 சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Competition between khushboo vs priyanka gandhi in wayanad by election exciting information on malayalam channels


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->