தூக்கு போட்ட தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!! கள்ளக்காதலிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை.!
near karnataga young man sucide for forgery
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாநகரில் கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக வாடகை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இவருடைய வீட்டிற்கு நாகராஜ சித்தையா என்பவர் வாடகைக்கு வந்தார்.
இதன் மூலம், இவருக்கும், அனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்திப்பது, உல்லாசம் அனுபவிப்பதுமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அனிதா நாகராஜாவை குடும்பத்தை பிரிந்து தன்னுடன் வந்து வாழுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு நாகராஜா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நாளடைவில் அனிதாவின் தொல்லை தாங்க முடியால் நாகராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அனிதாவை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கலபுரகி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் நாகராஜாவின் தற்கொலைக்கு அனிதா தான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததாக நீதிபதி தெரிவித்து, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார்.
English Summary
near karnataga young man sucide for forgery