மத்திய பிரதேசம் : நண்பரின் மனைவியை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்த நபர்.!
near madhya pradesh two peoples arrested for sexuall harassment case
மத்திய பிரதேச மாநிலத்தின் சந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கணவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கணவரின் நண்பர் சகீர் என்பவர், நண்பரின் மனைவியை தொடர்பு கொண்டு சிறையில் உள்ள உனது கணவரை விடுதலை செய்து வெளியே கொண்டு வருவதற்கு உதவுகிறேன். தேவையான அளவுக்கு பண உதவியும் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அந்த பெண்ணும் உண்மை என்று நம்பியுள்ளார். அதன்பின்னர், சகீர் அந்த பெண்ணிடம் உடல்சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் அந்த பெண்ணின் கணவர் சிறையில் இருந்து விடுதலையானார்.
இந்நிலையில், சகீர் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் பெண்ணின் வீட்டுக்கு சென்று, கூட்டாளிகளில் ஒருவர் பெண்ணின் கணவரை அழைத்துள்ளார். அதனால், வீட்டில் இருந்து வெளியே வந்த அவரிடம் சில விவகாரங்களை பற்றி பேச வேண்டும் என்று கூறி சற்று தொலைவில் அழைத்து சென்றுள்ளார்.
இதையடுத்து, சகீரின் மற்றொரு கூட்டாளி வீட்டின் வெளியே காவலுக்கு நிற்க, வீட்டுக்குள் புகுந்த சகீர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் பெண்ணின் கணவர் வீட்டிற்கு திரும்பியவுடன், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி அழுதுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இருவரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, வழக்கு பதிவு செய்த போலீசார் சகீரின் கூட்டாளிகள் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான சகீரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
near madhya pradesh two peoples arrested for sexuall harassment case