மகாராஷ்டிரா : காதலுக்கு மறுப்பு தெரிவித்த தாய்.! காதலனோடு சேர்ந்து கொலை செய்த மகள்.!
near maharashtra daughter and boy friend arrested for mother kill
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் மும்ரா பகுதியில் அம்ருத் நகரைச் சேர்ந்தவர் சபா ஹாஸ்மி என்ற பெண். இவருடைய கணவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இதனால், அவர் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை தனியாக கவனித்து வந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இதில், மூத்த மகள் அதேபகுதியைச் சேர்ந்த புர்கான் சேக் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இதையறிந்த சபா ஹாஸ்மி மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மகளின் காதலன் புர்கான் சேக் வீட்டுக்கு வந்தபோது, சபா ஹாஸ்மி, காதலை கைவிடுமாறு மகள் மற்றும் புர்கான் சேக்கை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் சபா ஹாஸ்மியை தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சபா ஹாஸ்மியின் மகளும் அவருடைய காதலனும் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பியோடினர்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், போலீசார் கல்யாண் அருகே ஹாஜி மலாங் பகுதியில் பதுங்கி இருந்த சபா ஹாஸ்மியின் மகள் மற்றும் காதலன் புர்கான் சேக்கை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் 17 வயது மகளை காப்பகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், காதலன் புர்கான் சேக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகளே, காதலனுடன் சேர்ந்து தாயை கத்தி மற்றும் கத்திரிக்கோலால் கொலை செய்த சம்பவம் மும்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near maharashtra daughter and boy friend arrested for mother kill