மத்திய பிரதேசம் : பணத்திற்காக வளர்ப்பு மகனுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்த தாய்..!
near mathya pradesh second mom poisoned to first wife son for money
மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரைச் சேர்ந்தவர் ராஜூ பரிஹார். இவர் மனைவி சீமா பரிஹார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதனால், ராஜூவுக்கு விபத்து காப்பீடாக ரூ.12 லட்சம் பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தில், ராஜு தனது மகன் நிதின் பரிஹார் பெயரில் வருங்கால சேமிப்பிற்காக ரூ.8 லட்சம் வைப்பு தொகையாக போட்டு வைத்துள்ளார்.
இதையடுத்து, ராஜூ, ஜூலி பரிஹார் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். நாளடைவில், ஜூலிக்கு, நிதின் பெயரில் கணவர் ரூ.8 லட்சம் பணம் சேமிப்பில் போட்டு வைத்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
எப்படியாவது, அந்த பணம் முழுவதும் தனக்கு கிடைக்க வேண்டும் என்ற பேராசையில், ஜூலி திட்டம் தீட்டியுள்ளார். அந்த திட்டத்தின் படி, கணவர் வெளியே சென்ற பின்பு, நிதினிடம் டீ சாப்பிடுகிறாயா? என்று கேட்டு உள்ளார். அதற்கு நிதினும் சரி என்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஜூலி டீயில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
பிறகு ராஜூ வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, சோர்வாக காணப்பட்ட நிதினிடம் விசாரித்துள்ளார். அதற்கு நிதின், ஜூலி டீ கொடுத்த பின்பு, உடல்நல குறைவு ஏற்பட்ட விசயங்களை தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதையறிந்த ராஜு உடனடியாக நிதினை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து, நிதின் சிறப்பு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி நிதின் உயிரிழந்துள்ளார். இதையடுத்து ராஜு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், பிரேத பரிசோதனையில் நிதினின் உடலில் விஷம் இருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் பதின்மூன்று சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு ஜூலி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால், ஜூலிக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
English Summary
near mathya pradesh second mom poisoned to first wife son for money