மூதாட்டியை கட்டி போட்டு ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்த 2 மர்மநபர்கள் - ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் நேற்றுமுன்தினம் குடியிருப்பு கட்டிடத்திற்குள் மர்ம நபர்கள் இரண்டு பேர் நுழைந்தனர். அதன் பின்னர் கட்டிடத்தில் வசித்து வரும் மூதாட்டியின் ஒருவர் வீட்டு கதவை தட்டியுள்ளனர். 

இந்த சத்தத்தைக் கேட்டு, மூதாட்டி கதவை திறந்து பார்த்தார். அப்போது, மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, மூதாட்டியை வீட்டின் உள்ளே தள்ளிவிட்டு அவரை கயிற்றால் கட்டி போட்டனர். 

இதையடுத்து, வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். 

அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் படி ஒரு நபரின் அடையாளம் தெரியவந்தது. 

அந்த தகவலின் பேரில் போலீசார் அந்த நபரை பிடித்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai man arrested for robbery in old lady house


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->