டியூசனுக்கு போகாததை கண்டித்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை.!
near puthuchery nineth class student sucide
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி தசரதன். இவர் மனைவி இளவரசி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகனான பாலமுருகன் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும், புதுவை வள்ளலார் தெருவில் உள்ள ஒரு டியூசன் சென்டரிலும் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பாலமுருகன் டியூசனுக்கு
செல்லவில்லை என்பதற்காக தசரதன் அவரைக் கண்டித்துள்ளார்.
இதனால், கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றதனால், பாலமுருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.
வீட்டில் நடந்த தகராறில் மனஉளைச்சலுக்கு ஆளான பாலமுருகன் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் மாலை வீட்டிற்குத் திரும்பிய பெற்றோர்கள் மகன் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near puthuchery nineth class student sucide