இந்தியாவில் 11 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமனம்.!
new governors appointed in eleven states
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றம் செய்யப்பட்டும், சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமனம் செய்தும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன் விவரத்தை இந்தப் பதிவில் காண்போம்.
*புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில், புதுச்சேரி மாநில புதிய துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை தொடர்ந்து அம்மாநிலத்துக்கு ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், சிக்கிம் ஆளுநராக இருந்த லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராகவும், மணிப்பூர் ஆளுநராக அவருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
* ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
* ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* சத்தீஸ்கர் மாநில கவர்னராக ராமன் தேகாவும், மேகாலயா கவர்னராக சி.எச்.விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
new governors appointed in eleven states