இந்தியாவில் 11 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமனம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றம் செய்யப்பட்டும், சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமனம் செய்தும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன் விவரத்தை இந்தப் பதிவில் காண்போம்.

*புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில், புதுச்சேரி மாநில புதிய துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை தொடர்ந்து அம்மாநிலத்துக்கு ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், சிக்கிம் ஆளுநராக இருந்த லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராகவும், மணிப்பூர் ஆளுநராக அவருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

* ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* சத்தீஸ்கர் மாநில கவர்னராக ராமன் தேகாவும், மேகாலயா கவர்னராக சி.எச்.விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று  ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new governors appointed in eleven states


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->