என்ஐஏ அதிகாரிகளுக்கு தண்ணி காட்டி வந்த பயங்கரவாதி! டெல்லியில் கைது!   - Seithipunal
Seithipunal


ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு இருப்பதாக சந்தேகப்படும், தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷானவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் ஷானவாஸ் தலைமறைவாக இருந்த போது டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். துணை ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தேடப்பட்டு வரும் ஷானவாஸ் வழக்கறிஞர் ஆவார். 

டெல்லியை சேர்ந்த இவர் கடந்த ஜூலை மாதம் புனோவில் கூட்டாளிகள் இருவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் அங்கிருந்து தப்பி சென்று டெல்லிக்கு வந்து மறைந்து வாழ்ந்து வந்தார். 

இவரை பிடித்து தருபவர்களுக்கு என்ஐஏ ரூ. 3 லட்சம் பரிசு தொகை அறிவித்திருந்தது. இந்நிலையில் ஷானவாஸ் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் பிடிபட்ட 2 பயங்கரவாதிகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்த ஐஇடி தயாரிக்கும் திரவம் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA officers Arrested terrorist  in Delhi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->