மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: பையுடன் காவல் நிலையத்தில் சரண்!
Odisha man murdered wife
ஒடிசா, நாயகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் பாக். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி தரித்ரி (வயது 30).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அர்ஜூன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கேட்டுள்ளார்.
ஆனால் அவரது மனைவி மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அர்ஜூன் தனது மனைவியின் தலையை கோடாரியால் துண்டித்து கொலை செய்தார்.
![](https://img.seithipunal.com/media/crime 0221.png)
பின்னர் தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அங்கிருந்த போலீசார் அவர் கொண்டு சென்ற பையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்று தலை இல்லாமல் இருந்த அவரது மனைவியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.