இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி பேட்டி! - Seithipunal
Seithipunal



ஒடிசா ரயில் விபத்து நான் இதுவரை பார்த்திறதா கொடூர விபத்து என்று, விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார்.

நேற்று மாலை ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பேட்டியின் யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில் மோதி, அடுத்தடுத்து பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த கொடூர விபத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக உள்ளது. 900 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், "நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரயில்களில் ஒன்று. இதுபோன்ற விபத்து சம்பவங்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த வரை ரயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை. பாதுகாப்பு கருவி ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.

உயிரிழந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Odisha Train Accident Mamatha Banerjee


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->