295 தொகுதிகளில் வெற்றி உறுதி... காங்கிரஸ் தலைவர் கார்கே நம்பிக்கை! - Seithipunal
Seithipunal


இண்டி கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்குப் பிறகு, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

டெல்லியில் இன்று இண்டி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், தேஜ்ஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா உள்ளிட்ட சில தலைவர்கள் மற்றும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.

இந்நிலையில், இண்டி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவிக்கையில், இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாக என்று தெரிவித்தார்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதம் செய்ததாகவும், எங்களை பிரிக்க நினைக்காதீர். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் நன்றி என்றும் கார்கே தெரிவித்தார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliamentary Election India Alliance Meeting 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->