சடலமாக கிடந்த இன்ஸ்டா பிரபலம் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிம்ரன் சிங் என்பவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சமூக வலைதளத்தில் பிரபலமான இவர், பிரீலான்ஸ் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தார். இவரை பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில், சிம்ரன் சிங் கடைசியாக கடந்த 13-ந்தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன் பிறகு சிம்ரன் சிங் தனது சமூக வலைதள பக்கங்களில் எந்த பதிவையும் வெளியிடவில்லை.

இதையடுத்து சிம்ரன் சிங் தனது அறையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவருடன் தங்கியிருந்த தோழி ஒருவர் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிம்ரன் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police investigation instagram popular died case in hariyana


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->