இந்த ஆண்டு முழுவதும் பவுர்ணமி கருடசேவை ரத்து..திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
Poornima Garuda Seva cancelled for the rest of the year Tirupati Devasthanams announced
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு முழுவதும் நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளி மாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இங்கு மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கருட சேவையானது நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவு சுவாமிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முழுவதும் மாதம் தோறும் நடைபெறும் கருட சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி மே மாதம் 12ஆம் தேதி ஜூலை மாதம் 10ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி அக்டோபர் மாதம் 7ஆம் தேதி நவம்பர் மாதம் 5ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பௌர்ணமி கருட சேவை நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது .
மேலும் ஜூன் மாதம் 14ஆம் தேதி திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதால் உள்ளதாலும், ஏழாம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதாலும், டிசம்பர் மாதம் நாலாம் தேதி கார்த்திகை தீபம் வருவதாலும் பௌர்ணமி கருட சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஆகவே பக்தர்கள் அனைவரும் திருப்பதி கருட சேவைக்கு செல்பவர்கள் இந்த செய்தியை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
English Summary
Poornima Garuda Seva cancelled for the rest of the year Tirupati Devasthanams announced