குடியரசுத் தலைவர் அதிரடி ஒப்புதல்!...உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இவரா? - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஓய்.சந்திரசூட், அடுத்த மாதம் நவம்பர் 10ம்-தேதி தேதி ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்ய அவருக்கு கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பிய நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்து இருந்தார்.

இந்த நிலையில்,  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் ஓய்வு பெறும் அடுத்த நாளில், சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சஞ்சீவ் கண்ணா, 1960ம் ஆண்டு டெல்லியில் பிறந்து, டெல்லி பல்கலையில் சட்டம் பயின்றார். பின்னர் 1983ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.

இதற்கிடையே, கடந்த 2004ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும், டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டில் சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President approves action is this the new chief justice of the supreme court


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->