4 மாதங்களுக்குப் பிறகு... மீண்டும் பிரதமரின் ''மனதின் குரல்'' நிகழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மீண்டும் இன்று முதல் தொடங்க உள்ளது. நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக பிப்ரவரி 25ஆம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார். 

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலமாக ஒளிபரப்பப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி மக்களவைத் தேர்தலை ஒட்டி கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மோடி மீண்டும் மூன்றாவது முறை பிரதமராக ஆட்சி அமைத்துள்ள நிலையில் இன்று முதல் இந்த நிகழ்ச்சி வானொலி மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. 

மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். அகில இந்திய வானொலி 'நமோ' செயலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் இன்று காலை 11 மணி அளவில் பிரதமரின் உரையை நேரலையில் கேட்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Voice of Mind show again start


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->