புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! பொதுமக்கள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் வழித்தடத்திலும், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழித்தடத்திலும் திருப்பதிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரயில்கள் அனைத்து ரயில்நிலையங்களிலும் நின்று செல்லும் என்பதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ரயில்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இந்த ரயில்கள் சேவை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Tirupaty passenger train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->