ஆஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீன இயக்குநர் ஹம்தான் பல்லாலை விடுதலை செய்துள்ள இஸ்ரேல் ராணுவம்..! - Seithipunal
Seithipunal


'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தை இயக்கியவர் பாஸல் அட்ரா. இவருடன் இணை இயக்குனராக பணியாற்றிய  ஹம்தான் பல்லா ஆஸ்கார் விருது பெற்றவர்.  இவர் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்,  தற்போது இவரை விடுதலை செய்துள்ளது. 

ஹம்தான் பல்லா இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது,  அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கினர். அப்போது, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேலின் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   "நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

பயங்கரவாதிகள் (பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்" எனத் தெரிவித்திருந்தது.

விடுதலை செய்யப்பட்டுள்ள ஹம்தான் பல்லால் உடன் மேலும் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர். அத்துடன்,  பல்லால் முகத்தில் கடுமையான காயமும், அவர் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli army releases Oscar winning Palestinian director Hamdan Ballal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->