புதுவை : திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.! பெண் குழந்தையின் பெற்றோரை தேடும் போலீசார்.!  - Seithipunal
Seithipunal


புதுவை பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் நடத்துனரிடமிருந்து இரண்டு பெண்கள் பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த இரண்டு பெண்களையும் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது அவர்களிடம் 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்தது. சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களிடம் அந்த குழந்தை யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தக் குழந்தை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாடகைக்கு வாங்கி வந்தது தெரியவந்ததுள்ளது.

இதைனையடுத்து காவல்துறையினர் அந்த குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த குழந்தையின்  பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக தனிப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuvai police search for baby parents


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->