பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தியது ரிசர்வ் வங்கி.! - Seithipunal
Seithipunal


பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.

நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவது தொடர்பான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் நடைபெற்றது .

இந்த கூட்டத்தின் முடிவில் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் ( ரெப்போ) 0.5% உயர்த்துவதாக ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடன் 0.5% உயர்ந்து 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நிலையான வைப்பு தொகை வசதி 4.65 சதவீதம் ஆகவும், விளிம்பு நிலை வசதி மற்றும் வங்கி விகிதம் 5.15 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரெப்போ விகிதம் உயர்ந்ததையடுத்து வீடு, வாகனம் மற்றும் தனி நபருக்கான கடனுக்கான வட்டி வீதமும் உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reserve bank increases repo rate interest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->