4 பாடங்களில் தோல்வி - நொடியில் மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா கெப்ரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் மகள் தனுஸ்ரீ. இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 9-ந் தேதி வெளியானது.

இதில், தனுஸ்ரீ 4 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட தனுஸ்ரீ வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர், தனுஸ்ரீயிடம் அடுத்த தேர்வில் 4 பாடங்களிலும் வெற்றி பெற்று விடலாம் என்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தனுஸ்ரீ நேற்று அதிகாலை தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனுஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in karnataga


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->