மும்பை : ரூ.1½ கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.! பயணி ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம், போதை பொருட்கள் போன்ற கடத்தல் பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று துபாய் செல்ல வந்த ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் அவர் எடுத்து அட்டை பெட்டியில் பழங்கள் இருப்பதாக கூறிய நிலையில், சந்தேகமடைந்த அதிகாரிகள் அட்டை பெட்டியை திறந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அட்டை பெட்டியின் பக்கவாட்டு பகுதியில் கத்தை, கத்தையாக வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற பயணியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பயணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seizure of foreign currency worth Rs 1 crore 50 lakhs in Mumbai airport


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->