#பெங்களூர் || சட்டவிரோதமாக பதுக்கிய ரூ.1¼ கோடி இ-சிகரெட் பறிமுதல் - 2 பேர் கைது
Seizure of illegally hoarded e cigarettes in bangalore
பெங்களூருவில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1¼ கோடி மதிப்பிலான இ-சிகரெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சட்டவிரோதமாக இ-சிகரெட்டுகள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அல்சூர்கேட் காவல் எல்லைக்குட்பட்ட கும்பாரபேட்டை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் குடோனின் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குடோனில் இ-சிகரெட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இ-சிகரெட்டுகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது சித்தலிங்கா(30), சச்சின் சவுத்ரி (23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ரூபாய்1¼ கோடி மதிப்பிலான இ-சிகரெட்டை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் இரண்டு பேரும் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Seizure of illegally hoarded e cigarettes in bangalore