அதிர்ச்சி சம்பவம்... சொத்திற்காக சித்திரவதை.. வளர்ப்பு தாயை கொன்ற மகன்.!!
Son killed foster mother for property in Andhra Pradesh
ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமிபாய் என்பவர் தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகனான தத்து நாயக்கை சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தத்து நாயக் சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இதனிடையே லட்சுமிபாய்க்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி வைக்குமாறு தத்து நாயக் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு லட்சுமிபாய் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர் லட்சுமி பாயிற்கு மின்சார பாய்ச்சி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அப்போதும் லட்சுமிபாய் மறுத்ததால், ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தத்து நாயக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Son killed foster mother for property in Andhra Pradesh