தென்னிந்தியாவில் "சனாதன தர்மத்தை" அழிக்க பார்க்கிறார்கள்.! - நரேந்திர மோடி குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்னும் மூன்று நாட்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர் தென்னிந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் குறித்து இழிவாக பேசப்படுவதாக குற்றம் சாட்டயுள்ளார். தென்னிந்தியாவில் உத்தர பிரதேச இழிவுபடுத்தி வாக்கு சேகரிக்கின்றனர். தமிழ்நாட்டில் திமுக கேரளாவில் இடதுசாரிகள் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உத்தரபிரதேசத்தை அவமானப்படுத்துகின்றன.

மேலும் சனாதான தர்மத்தை அழிக்க வேண்டும் என பேசுகிறார்கள் என பொதுக்கூட்ட மேடையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi accuses into destroy SanadanaDharma


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->