காட்டுக்கு விறகு ஒடிக்க சென்ற சென்ற பெண்ணுக்கு கிடைத்த கல் - ஒரே இரவில் பெரும் கோடீஸ்வரி ஆன கதை.!
stone found woman then becoming a huge millionaire overnight
மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் உள்ள புருஷோத்தம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெண்டா பாய். இவர் விறகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி ஜெண்டா பாயின் மனைவி காட்டுக்குள் விறகு பொறுக்குவதற்காக சென்றிருக்கிறார்.
அப்போது, மண்ணுக்கடியில் பளபளப்பாக மின்னிய கல்லை பார்த்த அவர் அதனை எடுத்து வந்து தனது கணவரிடம் காட்டியுள்ளார். அவர் அதனை உடனடியாக உள்ளூரில் இருக்கும் வைர கற்களை ஆராயும் அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றார்.
அப்போது, அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அது 4.39 கேரட் வைரம் என்று தெரியவந்தது. அவர்கள் அரசு விதிமுறைகளின் அடிப்படையில் இந்த வைரம் ஏலத்தில் விடப்படும். மாநில அரசுக்கான வரிகள் போக மீதமுள்ள தொகை ஜெண்டா பாயிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஜெண்டா பாய், அந்த தொகையை வைத்து தங்களுக்காக பெரிய வீடு ஒன்றைக் கட்டப்போவதகாவும், மீதமுள்ள தொகையை தங்களது மகள்களின் திருமணத்திற்காக சேமிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
stone found woman then becoming a huge millionaire overnight