சாதி வரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் - மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.!
tamilnadu cm mk stalin Emphasis to central govt for Caste Tax Census
மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"இந்தியாவில் பின் தங்கிய சமூகத்தினரின் விகிதாசாரத்தை தெரிந்து கொள்ளவும், நாட்டின் சமூக நீதியை நிலைநாட்டிடவும், நமது உரிமைகளை பெறவும் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே நடத்த வேண்டும்.
சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி ஆகும்.
தி.மு.க.,வின் சட்டப் போராட்டங்களால் மூன்று ஆண்டுகளில் 15,066 ஓ.பி.சி., மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது பெருமை அளிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilnadu cm mk stalin Emphasis to central govt for Caste Tax Census