பெரும் பரபரப்பு! பெண்கள் விடுதியில் 9 மாணவிகளை கடித்த எலி! மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் பள்ளி பெண்கள் விடுதியில் எலி கடித்து 9 மாணவிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி உயிருடன் நீச்சல் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் தரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதியில் 9 மாணவிகளை எலி கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த மாணவிகள் ராமயம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எலி தொல்லையை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் விடுதியில் தூய்மை இல்லாதது குறித்து புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana 9 students were injured after being bitten by a rat in a school girls hostel


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->