மகளிர் உலகக்கோப்பை!...நெருக்கடியில் உள்ள இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் களம்! - Seithipunal
Seithipunal


அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் 9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.


10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ள நிலையில், அணிகள் இரண்டு  பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா,  பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், 'புதுமுகம்' ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற உள்ளது.

இந்நிலையில்,  துபாயில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி இந்த ஆட்டத்தில்  தோல்வி கண்டால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.  தொடர்ந்து, இன்று  இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens world cup indian team in crisis today against pakistan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->