லாரி மீது மோதிய பேருந்து - 3 பேர் பலி; 14 பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகருக்கு இருபது பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 

இந்தப் பேருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டம் புடிக்மாரி சதுக்கத்திற்கு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். 

அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிகையில், விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died and fourteen peoples injured in odisa


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->