900 கிமீ தொலைவில் வசித்த இரட்டையர்கள்.. சில மணி நேர இடைவெளியில் வினோதமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் 900 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த இரட்டையர்கள் சில மணி நேர இடைவெளியில் வினோதமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இரட்டை சகோதரர்களான சுமர் சிங் மற்றும் சோஹன் சிங் வெவ்வேறு மாநிலங்களில் 900 கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்தனர். இதில் குஜராத்தில் உள்ள டெக்ஸ்டைல் ​​சிட்டியில் பணிபுரிந்து வந்த சுமர் சிங், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கடந்த புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சில மணி நேர இடைவெளியில் ஜெய்ப்பூரில் வசித்து வந்த சோஹன் சிங், வியாழக்கிழமை அதிகாலை திருப்பாத விதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து இரட்டை சகோதரர்களின் உடல்கள் அவர்களுடைய சொந்த கிராமமான சார்னோ கா தலாவில் தகனம் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twins Died In Strangely Similar Manner In Few Hours Gap In Rajasthan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->