காவல் தேர்வில் முறைகேடு - 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 11-ந்தேதி மும்பை காவல் துறைக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் கலந்துகொள்ள சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியை சேர்ந்த ரவூப் பதான் என்பவர் வந்தார். அவரிடம் கண்காணிப்பளர் சோதனை நடத்தினர். 

அப்போது, பதானின் காதில் புளூடூத் சாதனம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதேபோன்று காந்திவிலி பகுதியில் நடந்த தேர்வின் போது பீட் மாவட்டத்தை சேர்ந்த நிகில் என்பவர் தேர்வு அரங்கில் நுழைய முயன்றார். 

உடனே அவரது ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. உடனே அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது உடல் தகுதி தேர்வின் போது நிகில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், எழுத்து தேர்வின் போது தனது உறவினருடன் மும்பை வந்து போலி ஹால் டிக்கெட்டை தயாரித்து உள்ளே நுழைய முயன்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for malpractice in police exam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->