உத்தரகாண்ட் பேருந்து விபத்து பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு.!
Udhrakhand bus Accident 26 death
உத்தரகண்ட் மாநிலத்தில் பக்தா்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் இருந்து 30 பக்தர்களுடன் உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரியை நோக்கி பேருந்து சென்றது.
அப்பொழுது உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள டாம்டா பகுதி அருகே உள்ள மலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 22 பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விபத்தின் தேடுதல் மற்றும் மீட்பு பணி முடிவடைந்துள்ளது.
இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உயர்நிலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Udhrakhand bus Accident 26 death