மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்நாத் சிங். இவர் நேற்று முன்தினம் இரவு கடுமையான முதுகு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு அவர் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கண்காணிப்பில் நிலையாக உள்ளார். மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, எம்.ஆர்.ஐ. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அமோல் ரஹேஜாவின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது உடல்நிலை குறித்து நரம்பியல் துறை இன்னும் கூடுதல் தகவல்களை வழங்கவில்லை.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆந்திராவில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது இதேபோன்ற வலியை குறித்து புகார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister rajnath singh admitted hospital for back pain


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->