காதலியின் ஆபாச புகைப்படம்! மிரட்டிய நண்பனை அடித்தே கொன்ற 16 வயது சிறுவன்! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம்: காதலியின் ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டிய தனது நண்பனை, 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் நகரில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த அபினவ் என்ற மாணவன், தனது நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை திருடி தனது செல்போனில் சேமித்துள்ளார். 

பின்னர், அந்த பெண்ணை நேரில் சந்தித்து புகைப்படங்களை காட்டி, "நான் சொல்வது போல நடந்துகொள்ளாவிட்டால், இவைகளை இணையத்தில் வெளியிடுவேன்" என மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டலால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண், நடந்ததை தனது காதலனிடம் தெரிவிக்க, இதனால் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான அந்த 16 வயது சிறுவன், அபினவைக் காளி நதிக்கரைக்கு அழைத்து சென்று இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளான்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 16 வயதில் கொலை குற்றவாளியான சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP School Student love murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->