8ஆம் வகுப்பு மாணவி 6 மாத கர்ப்பம்.! போக்சோவில் வாலிபர் கைது.!
Young man arrested for 8th class girl 6 month pregnant in Karnataka
கர்நாடக மாநிலத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியை சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதி அடைந்து வந்துள்ளார்.
இதனால் பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்பொழுது தினமும் சிறுமி பள்ளிக்கு தனியாக சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man arrested for 8th class girl 6 month pregnant in Karnataka