ராமநகர் அருகே பரபரப்பு.! விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் தம்பி பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கடுசிவனஹள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி மல்லேஷ் என்பவரின் தோட்டத்தில் ஒரு முஸ்லிம் தம்பதி வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு சாதிக்(16), ஷாமா (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை அவர்கள் மல்லேசின் தோட்டத்தில் செய்து கொண்டு இருந்தபோது சாதிக்கும், ஷாமாவும் தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு சுவரில் தொங்க விடப்பட்டு இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சாதிக்கும், ஷாமாவும் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாதிக் ட்ரிக்கரை அழுத்தியதால் ஷாமா மீது குண்டு பாய்ந்துள்ளது.

இதில் ஷாமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் சார் ஷாமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விளையாடி கொண்டு இருந்த போது தெரியாமல் டிரிக்கரை அழுத்தியதால் குண்டு பாய்ந்து ஷாமா உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்ததாக மல்லேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

younger brother was killed when the boy who was playing shot him with a gun in Karnataka


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->