போக்குவரத்து காவலரின் காலை அமுக்கி விட்ட வாலிபர் - சர்சையைக் கிளப்பிய சம்பவம்.!
youth crushed traffic police leg in maharastra
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரத்தில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே வாகன சோதனையில் ஈடுபட்டார்.
ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
youth crushed traffic police leg in maharastra