#BigBreaking || தேனியில் முக்கிய புள்ளியை களமிறக்கிய எடப்பாடி.! சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு.!
admk eps announce for theni trichy protest
சென்னையில் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கண்டித்து சென்னையில் வரும் 27ஆம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் ஒன்பது அதிமுக மாவட்டங்களும் இணைந்து ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று, எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
25ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை ஏற்பார் என்றும், கன்னியாகுமரி போராட்டத்திற்கு தளவாய் சுந்தரம் தலைமை ஏற்பார் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தஞ்சை வடக்கு மாவட்ட போராட்டத்திற்கு காமராஜ் தலைமை ஏற்று நடத்துவார் என்றும், தஞ்சை தெற்கு மாவட்ட போராட்டத்திற்கு ஓஎஸ் மணியன் தலைமையேற்று போராட்டம் நடத்துவார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆர்பி உதயகுமார் மற்றும் ஜக்கையின் தலைமை ஏற்று நடத்துவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
admk eps announce for theni trichy protest