எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த தளவாய் சுந்தரம்! ஆனாலும் இது நல்லதுதான்!
ADMK EPS ThalavaiSundaram
கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்த அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தின் பதவி தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது.
பதவி பறிப்பு குறித்த நடவடிக்கைக்கு, தளவாய் சுந்தரம் அளித்த பேட்டியில், "இந்த அறிவிப்பு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை.
எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் விடுத்த அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மற்றபடி அதில் உள்நோக்கம் ஏதுமில்லை. நான் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கொள்கையை மீறி அல்லது கூட்டணி தொடர்பாகவோ நான் எந்த விதமான செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு கட்டுப்படாமல் தளவாய் சுந்தரத்தின் பெயருக்கு பின்னால் கட்சிப் பொறுப்புகளை அச்சிட்டு ஆயூதபூஜை போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
தளவாய் சுந்தரம் ஒருவேளை பாஜகவில் இணைந்து விடுவாரோ என்று குமாரி மாவட்ட அதிமுகவினர் அச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த போஸ்டர் ஒருவிதத்தில் நல்லதுதான் என்கின்றனர் அதிமுகவினர்.
English Summary
ADMK EPS ThalavaiSundaram