நடப்பதை எல்லாம் பார்த்தா, இதுல ஏதோ மர்மம் இருக்குற மாறி தெரியுது? ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி!
ADMK ExMinister RP Udhayakumar Say About DMK BJP MK Stalin Annamalai
தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் தெரிவிக்கையில், "பாஜகவை தமிழ்நாட்டிற்குள் விட மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் ரூ.100 நாணயம் வெளியீட்டு விழாவின் மூலம் பாஜகவை சிவப்பு கம்பளம் விரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
‘Go Back Modi’ என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ‘Welcome Modi’ என வரவேற்கிறார்”மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு நிகழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் மாநில அரசு தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளது. மத்திய அரசு விழா என்று மாநில அரசு சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.
தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது? தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் பாஜகவோடு முதல்வர் ஸ்டாலின் இணக்கம் காட்டுகிறார். பாஜக - திமுக இடையேயான உறவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அண்ணாமலைக்கு தமிழகத்தின் நிலவரமும், கலவரமும் தெரியவில்லை. அரசியல் அனுபவமும் புரிதலும் இல்லாத தலைவராக அண்ணாமலை உள்ளார். அவருக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவை" என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
English Summary
ADMK ExMinister RP Udhayakumar Say About DMK BJP MK Stalin Annamalai