வாய்மொழியாக வெளியான உத்தரவு.! தடை நீங்கியும் தடை., அந்த தீர்ப்புக்காக காத்திருக்கும் அதிமுகவினர்.!
admk head office still closed info ops vs eps
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியானபின் ஓபிஎஸ் கை ஓங்கியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், வழக்கின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே, கடந்த மாதம் 11-ந்தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் காரணமாக, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சீல் அகற்றப்பட்டு, அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்டு 20-ந்தேதி (நேற்றுவரை) வரையில் அலுவலகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
தடைகாலம் நேற்றுடன் முடிந்த பிறகும், அதிமுக அலுவலகத்திற்கு தற்போதுவரை யாரும் செல்லவில்லை.
இதுகுறித்து வெளியன்ன தகவலின்படி, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டபோது சேதம் அடைந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. தற்போது, கட்சியினர் உள்ளே நுழைந்தால் ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு ஏற்படும் என்பதால், கட்சியினர் யாரும் தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டாம் என, ஒரு வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று, அந்த தகவல் தெரிவிக்கின்றது.
மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் வரும் தீர்ப்பு வரும்வரையும், அதிமுகவில் மோதல் விலகி இயல்பு நிலை திரும்பும் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
admk head office still closed info ops vs eps