வாயை விட்ட ஆர்எஸ் பாரதி! திமுகவின் அழிவு ஆரம்பம் - அதிமுக ஜெயக்குமார் கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரின் பெயரை வைத்து எதற்கு அம்மா உணவகம் செயல்பட வேண்டும் என்று, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆர் எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

அதில், ஆர்.எஸ்‌.பாரதி போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம்!

பலருக்கு ஒரு நாள் என்பது மூன்று வேளை!

வறுமை-பசி என எதையாவது தங்கள் வாழ்க்கையில் திமுக குடும்பம் உணர்ந்திருந்தால் அம்மா உணவகத்தை மூட வேண்டும் என திட்டமிட்டு மேடைதோறும் முழங்குமா?

அம்மா உணவகம் குறித்த ஆர்.எஸ்.பாரதியின் எண்ணம் திமுகவின் அழிவுக்கான பாதை!

எத்தனையோ இளைஞர்களுக்கு கடினமான நேரத்தில் தாயுள்ளத்துடன் உணவிட்டு பசியாற்றியது அம்மா உணவகம்!

இன்றைக்கு அம்மா உணவகங்கள் அரசின் நிதியின்றி மூடும் நிலையில் உள்ளது.

இதனால் பலர் பசியோடு வாழ்க்கையை நகர்த்தும் அவலத்தில் உள்ளனர்.

இளநீர் இட்லி வாங்கி ருசிக்கும் குடும்பத்திற்கு பசி‌யின் கொடுமை எப்படி புரியும்? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar condemn to DMK rs Bharathi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->