ஆரம்பிக்கலாமா... நாள் குறித்த ஓபிஎஸ் - வெளியானது அறிவிப்பு.!
ADMK OPS high Appeal to SC
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ்-யை அதிமுகவில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரவேண்டும் என்று, தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே, நேற்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு தொடர்பான தீர்ப்புக்கு எதிராக, வரும் திங்கட்கிழமை (செப்., 5) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
English Summary
ADMK OPS high Appeal to SC