அடடே! எடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டி புகழ்ந்து பேசிய ஓபிஎஸ் மகன்.!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு தங்கள் தரப்புக்கு ஆதரவாக வந்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதனை நிரூபிக்கும் வகையில், இந்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் தெரிவிக்கையில், "அதிமுக என்ற மாபெரும் இயக்கம் இன்னும் நூறாண்டுகள் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசை.

அதனை கருத்தில் கொண்டு மீண்டும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் வலிமையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். எங்களுக்கு பாதிப்பு, உங்களுக்கு பாதிப்பு என்ற விவாதங்கள் எதுவும் தேவையில்லை. 

கசப்புகளை மறந்து நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்" என்று ஓ பன்னீர்செல்வம் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமிக்கும், நேரடியாக சசிகலா, தினகரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில், அழைப்புக்கு தினகரன் ஓகே சொல்ல, எடப்பாடி பழனிசாமி முடியாது என்று மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ஓபிஎஸ் மகனும், அதிமுக எம்.பி.,யுமான ரவீந்திரநாத் இன்று தெரிவிக்கையில், "அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எண்ணம். அதிமுக ஒன்று பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓபிஎஸ் தனது ஆவலை வெளிப்படுத்தி வருகிறார்.

திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புகிறார். எடப்பாடி பழனிசாமி வளர்ச்சிக்கு அவரது உழைப்பை காரணம். அதை நான் வரவேற்கிறேன்" என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS VS EPS OPR SAY ABOUT EPS


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->